குவேனி சாபம்


குவேனி சாபம்

குவேனியை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், ஆத்திரமடைந்த குவேனி சாபம் விடுகிறாள். இலங்கையில் சிங்கள சந்ததிகள் யாராலும் நிலையான அரியணையில் அமர முடியாது என்று சாபம் விடுகிறாள்.
இந்த காரணத்தினால் இன்று வரை இலங்கையில் அரசியல் ரீதியான பிரச்சனைகள் இருக்கின்றன.
சாபத்தில் இருந்து மீள ஆலயம் கட்டிய சிங்களவர்கள்
இந்த சாபத்தை போக்க வேண்டுமாயின் இளவரசர் விஜயன் - குவேனி ஆகியோரின் சிலைகள் அருகருகில் இருக்கும் வகையில் ஆலயம் ஒன்று 2014 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
மாத்தறை புகையிரத நிலைய வீதியில் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் ஆலயர்புனர் நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டபோது அந்த ஆலயத்தில் விஜயன் மற்றும் குவேனியின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இலங்கையில் சிங்களவர்கள் உருவாக காரணமான விஜயன் மற்றும் இயக்கர் குல வேடுவ பெண்ணான குவேனி ஆகியோருக்கான முதல் கோயில் இதுவாகும்.

Comments