பணமே - பணமே
_*பணமே - பணமே-*_
_*உனக்குத் தான் எத்தனை பெயர்கள்?*_
அர்ச்சகருக்கு கொடுத்தால் _*தட்சனை*_ என்றும்,
கோயில் உண்டியலில் செலுத்தினால் _*காணிக்கை*_ என்றும்,
யாசிப்பவருக்குக் கொடுத்தால்* பிச்சை* என்றும்,
கல்விக் கூடங்களிலோ _*கட்டணம்*_ என்றும்,
திருமணத்தில் _*வரதட்சணை*_ என்றும்,
திருமண விலக்கில் _*ஜீவனாம்சம்*_ என்றும்,
விபத்துகளில் இறந்தால், _*நஷ்ட ஈடு*_ என்றும்,
ஏழைகள் கேட்டுக் கொடுத்தால், _*தர்மம்*_ என்றும்,
நாமாக விரும்பி ஏழைகளுக்கு கொடுத்தால் _*தானம்*_ எனவும்,
திருமண வீடுகளில் _*மொய்*_ என்றும்,
திருப்பித்தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால், அது _*கடன்*_ என்றும்,
திருப்ப தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் _*அன்பளிப்பு*_ என்றும் -
விரும்பிக் கொடுத்தால் _*நன்கொடை*_ என்றும்,
நீதிமன்றத்தில் செலுத்தினால் _*அபராதம்*_ என்றும்,
அரசுக்குச் செலுத்தினால் _*வரி*_ என்றும்,
அரசு, பொது, தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் _*நிதி*_ என்றும்
மறைத்து வைத்தால் _* கறுப்புப் பணம்*_ என்றும்,
செய்த வேலைக்கு, மாதந்தோறும் கிடைப்பது _*சம்பளம்*_ என்றும்,
தினமும் கிடைப்பது _*கூலி*_ எனவும்,
பணி ஓய்வு பெற்றால் கிடப்பது பணிக்கொடை* [அ] _*ஓய்வூதியம்*_ எனவும்,
சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவது _*கையூட்டு*_ எனவும்,
கடன் வாங்கினால் அத்தொகைக்கு
_*அசல்*_ எனவும்,
வாங்கிய கடனுக்குக் கொடுக்கும் போது _*வட்டி*_ எனவும்,
தொழில் தொடங்கும் போது போடும் தொகைக்கு _*முதல்*_ எனவும்,
தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு _*லாபம்*_ என்றும்,
குருவிற்குக் கொடுக்கும்போது
_*குருதட்சணை*_ எனவும்,
ஹோட்டலில் நல்குவது _**டிப்ஸ்*_ எனவும்,
_*இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்த பணத்திற்கு மாற்றாக..... வேறொன்றானது ஏதேனும் இப்பூமியில் உண்டா?
Comments
Post a Comment